பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. தற்போதுள்ள படித்த பெண்களுக்கு இந்திய சட்டத்தைப்பற்றிய போதிய அறிவு இல்லை. இந்திய தண்டனைச்சட்டம் 1860,பிரிவு-292(ஏ) படி ஒரு பெண்ணின் புகைப்படத்தையோ, ஏதேனும் ஆவணங்களையோ வெளியிடுவதும் வெளியிடப் போவதாக மிரட்டி (பிளாக் மெயில்) பணம் பெறுவதும், வேறு ரீதியிலான நிர்ப்பந்தங்களில் தள்ளுவதும் இந்தச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
முதன்முறை தவறு செய்யும் போது 2 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் வரை அபராதமும், இரண்டாம் முறை தவறு செய்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
Post a Comment